/indian-express-tamil/media/media_files/H8sUp5D0ZvisDca2IPxW.jpg)
World Tamil Diaspora day
விசுவாசமாக இருந்தும் இலங்கையில் வாழும் மலையக மற்றும் ஈழத் தமிழர்களுக்கு தீவு தேசத்தில் சம உரிமை வழங்கப்படவில்லை என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சென்னையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
சென்னை வர்த்தக மையத்தில் தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த அயலகத் தமிழர் தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் நாம் எங்கிருந்தாலும், நாம் வாழும் நாடுகளுக்கு விசுவாசமாக இருக்கிறோம். அந்த நாடுகளில் உள்ள அரசாங்கங்களுக்கு நாங்கள் விசுவாசமாக இருக்கிறோம். இலங்கையைத் தவிர, உலகெங்கிலும் உள்ள அரசுகள் அங்கு வாழும் தமிழர்களுக்கு சம உரிமை அளித்து வருகின்றன.
வடகிழக்கு இலங்கையில் வாழும் தமிழர்களாக இருந்தாலும் சரி அல்லது இலங்கையின் மலைப்பகுதியில் வாழும் தமிழர்களாக இருந்தாலும் சரிநாங்கள் சம உரிமையுடன் வாழவில்லை.
அதே சமயம் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறோம். நாம் வாழும் நாடுகளின் தேசியத்தை ஆதரிக்கிறோம். இலங்கை தமிழர்களாகிய நாங்கள் இலங்கையில் உள்ள எங்கள் அரசுக்கு விசுவாசமாக இருக்கிறோம். ஆனால் எங்கள் விசுவாசம் ஏற்கப்படவில்லை. தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சியில் உள்ள சமத்துவம் என்னை மிகவும் கவர்ந்தது. சமத்துவக் கருத்து கடல் கடந்து இலங்கையை தழுவ வேண்டும், என்றுஅவர் மேலும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us