/indian-express-tamil/media/media_files/fgtUrGvkB38qQMWWHExP.jpg)
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மீனவர்கள் சென்ற 3 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். இந்தச் சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.