தமிழக, காரைக்கால் மீனவர்கள் கைது: விடுவிக்க மாநில அரசுகளுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை

தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை விடுவிக்க குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை விடுவிக்க குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Pudukkottai 21 TN fishermen arrested srilankan navy Tamil News

தமிழக, காரைக்கால் மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக  காரைக்கால் உட்பட 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், அவர்களை விடுதலை செய்ய மீனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வமணி என்பவருக்கு சொந்தமாக விசைப்படையில் கடந்த 7ஆம் தேதி காரைக்கால் மாவட்ட மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து காரைக்கால் சேர்ந்த 4 மீனவர்கள் மற்றும் மயிலாடுதுறை, நாகை சேர்ந்த 6 மீனவர்கள் என மொத்தம் பத்து மீனவர்கள் நடுக்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். 

இந்த நிலையில் இன்று அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கு இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 10 மீனவர்களை கைது செய்துள்ளனர்.

இதில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள காரைக்கால் உட்பட தமிழகத்தை சேர்ந்த 10 மீனவர்களையும், அவர்களது படகுகளை விடுதலை செய்ய மீனவர்களின் உறவினர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fishermen Arrest

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: