ஸ்ரீவில்லிபுத்தூர் சீனிவாச பெருமாள் கோயில்: 36 ஆண்டுகளுக்குப் பிறகு மகாகும்பாபிஷேகம் கோலாகலம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள தென் திருப்பதி எனப் போற்றப்படும் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில், 36 ஆண்டுகளுக்குப் பிறகு மகாகும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள தென் திருப்பதி எனப் போற்றப்படும் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில், 36 ஆண்டுகளுக்குப் பிறகு மகாகும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
Srivilliputhur Thiruvannamalai Srinivasa Perumal temple Kumbabishekam

Srivilliputhur Thiruvannamalai Srinivasa Perumal temple Kumbabishekam

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், தென் திருப்பதி என்று பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறது. இந்தக் கோயில், ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தைக் காண வந்த திருப்பதி சீனிவாச பெருமாள் இந்த மலையிலேயே தங்கியதாகக் கருதப்படுவதால் இந்த சிறப்புப் பெயரைப் பெற்றது. இந்தக் கோயிலில் கடைசியாக கடந்த 1989-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சரியாக 36 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மகாகும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்து முடிந்துள்ளது.

திருப்பணிகள் மற்றும் ஆயத்தப் பணிகள்

Advertisment

கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலாலயம் செய்யப்பட்டு, கோயிலின் திருப்பணிகள் தொடங்கின. கோயில் முழுவதும் உபயதாரர் நிதியில் பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, பெருமாள் சந்நிதி உட்பிரகாரத்தில் தரைத்தளத்தில் கற்கள் பதிக்கப்பட்டன. மேலும், கோபுரத்திற்கு புதிய வர்ணம் பூசப்பட்டு, கோயில் புதுப்பொலிவு பெற்றது. பக்தர்களின் வசதிக்காக அன்னதான கூடம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகளும் இதில் அடங்கும்.

கும்பாபிஷேகத்திற்கான ஆயத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, ஜூலை 3-ம் தேதி முதல் மூலவர் தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. கருவறை திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், ஜூலை 12-ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

மகாகும்பாபிஷேகம் விழா

கும்பாபிஷேக தினத்தன்று, ஜூலை 14, 2025 அன்று அதிகாலை 3 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கின. புண்யகாவாசனம், காலசந்தி பூஜை, அக்னி ஆராதனம், மூர்த்தி ஹோமங்கள் போன்ற வைதீகச் சடங்குகள் பக்தர்களின் பக்திப் பரவசத்திற்கு மத்தியில் நடைபெற்றன.

Advertisment
Advertisements

காலை 5.15 மணிக்கு மங்கல இசையுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. சரியாக காலை 5.45 மணிக்கு பெருமாள் சன்னதி விமானம், சாள கோபுரம், ரமார் பாதம் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது விண்ணதிர "கோவிந்தா கோவிந்தா" என்ற கோஷம் பக்தர்களால் எழுப்பப்பட்டது. 

கும்பாபிஷேகம் முடிந்தவுடன், மூலவர் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் ராஜ அலங்காரங்கள் நடைபெற்றன. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த தெய்வீக நிகழ்வில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: