கல்வி, சமூக நலத் திட்டங்களில் சிறப்பாக செயல்படும் மாநிலத்துக்கு நிதி தர மறுப்பதா? மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

மத்திய அரசு எஸ்.எஸ்.ஏ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுப்பதை சுட்டிக் காட்டி முதல்வர் ஸ்டாலின் கேள்வி

மத்திய அரசு எஸ்.எஸ்.ஏ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுப்பதை சுட்டிக் காட்டி முதல்வர் ஸ்டாலின் கேள்வி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Stalin camp

சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு, தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுப்பதால் நிதி மறுக்கப்படுகிறது. இலக்கை அடையாத மாநிலங்களுக்கு தாராளமாக நிதி வழங்குகிறது மத்திய அரசு. இதுதான் மத்திய அரசு கல்வியை மேம்படுத்தும் முறையா? மத்திய அரசின் எஸ்.எஸ்.ஏ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுப்பதை சுட்டிக் காட்டி முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.

Advertisment

கல்வி, சமூக நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி தர மறுப்பதா? என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி தர மறுப்பதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு வெளியிட்டுள்ளார். அதில்,  கல்வி, சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க மறுக்கிறது.

மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் தமிழ்நாட்டுக்கு எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்காமல் ஒன்றிய அரசு தாமதம் செய்கிறது. தேசிய கல்விக் கொள்கையை வலுக்கட்டாயமாக ஏற்க வைக்கும் முயற்சியாக ஒன்றிய அரசு நிதி வழங்க மறுப்பு தெரிவித்து வருகிறது.

Advertisment
Advertisements

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்துக்கு ஒன்றிய அரசின் நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை. கல்வி மற்றும் சமத்துவத்தை ஒன்றிய அரசு ஊக்குவிக்கும் லட்சணம் இதுதானா?" என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதை நாட்டு மக்களின் முடிவுக்கே விட்டுவிடுவதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: