/tamil-ie/media/media_files/uploads/2022/12/973029-stalin.jpg)
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஜன.9) கூடியது. அப்போது, ஆளுனர் ஆர்.என். ரவி உரையின் மீதான தீர்மானத்தினை முன்மொழிந்து சட்டப்பேரவையில் மு.க. ஸ்டாலின் பேசினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “ஆளுநனுக்கு வரைவு உரையானது தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்கனவே அனுப்பப்பட்டு, இன்றைக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும் அச்சிட்ட பிரிதிகளாகவும் வழங்கப்பட்டு உள்ளன.
திராவிட மாடல் கொள்கைக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டுவரும் ஆளுனரின் செயல்பாடுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் உள்ளன.
நாங்கள் சட்டமன்ற விதிகளை பின்பற்றி ஆளுனர் உரையை தொடங்குவதற்கு முன்பு எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை.
பேரவையில் மிகவும் கண்ணியத்தோடு அரசமைப்பு சட்டத்தின்கீழ் உரையாற்ற வந்துள்ள ஆளுனருக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில், நாங்கள் நடந்துகொண்டோம்.
ஆனாலும் எங்கள் கொள்கைக்கு மட்டுமல்ல அரசின் கொள்கைகளுக்கே கூட அவர் மாறாக நடந்துகொண்டு தமிழ்நாடு அரசு தயாரித்து ஆளுனரால் இசைவளிக்கப்பட்டு அச்சிடப்பட்ட உரையை முழுமையாக படிக்காதது மிகவும் வருந்ததக்கது மட்டுமல்ல, சட்டமன்ற மரபுகளை மீறும் ஒன்றும் ஆகும்.
ஆகவே சட்டப்பேரவை விதி 17-ஐ தகர்த்தி இன்றைக்கு அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் பேரவை தலைவர் அவர்களால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும் அவைக் குறிப்பில் ஏற வேண்டும்.
அதேபோல் இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுனர் இணைந்து விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன்.
இத்தீர்மானத்தினை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.