ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு; ஸ்டாலின் அறிவிப்பு

ஆவின் நிறுவனத்தால் ரூ 35க்கு கொள்முதல் செய்யப்பட்ட பசும்பால் ரூ.38க்கும், ரூ.44க்கு விற்கப்பட்ட எருமைப்பால் ரூ.47க்கும் டிசம்பர் 18 ஆம் தேதி முதல் கொள்முதல் செய்யப்படும்; ஸ்டாலின் அறிவிப்பு

ஆவின் நிறுவனத்தால் ரூ 35க்கு கொள்முதல் செய்யப்பட்ட பசும்பால் ரூ.38க்கும், ரூ.44க்கு விற்கப்பட்ட எருமைப்பால் ரூ.47க்கும் டிசம்பர் 18 ஆம் தேதி முதல் கொள்முதல் செய்யப்படும்; ஸ்டாலின் அறிவிப்பு

author-image
WebDesk
New Update
Aavin Milk 1

ஆவின் நிறுவனத்தால் ரூ 35க்கு கொள்முதல் செய்யப்பட்ட பசும்பால் ரூ.38க்கும், ரூ.44க்கு விற்கப்பட்ட எருமைப்பால் ரூ.47க்கும் டிசம்பர் 18 ஆம் தேதி முதல் கொள்முதல் செய்யப்படும்; ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசு ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியுள்ளது. ரூ 35க்கு கொள்முதல் செய்யப்பட்ட பசும்பால் ரூ.38க்கும், ரூ.44க்கு விற்கப்பட்ட எருமைப்பால் ரூ.47க்கும் டிசம்பர் 18 ஆம் தேதி முதல் கொள்முதல் செய்யப்படும். இதன் மூலம் சுமார் 4 லட்சம் பால் விவசாயிகள் பயனடைவார்கள் என தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (TNCMPF) தெரிவித்துள்ளது.

Advertisment

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவின் நிறுவனம் 3.87 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் இந்த நிதியாண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 32.98 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார் 30 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்குத் தேவையான கலப்புத் தீவனத்தையும். கால்நடை மருத்துவ வசதிகளையும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் வாயிலாக ஆவின் நிறுவனம் வழங்கி வருகிறது.

கடந்த ஆண்டு 05.11.2022 முதல் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு, பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.35/- ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.44/- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

பால் கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கமே பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையையும், நுகர்வோர்களுக்கு தரமான பாலை நியாயமான விலையில் விற்பனை செய்வதுமேயாகும். இந்தச் சூழ்நிலையில், இடுபொருட்களின் விலை உயர்வு, உற்பத்திச் செலவினம் ஆகியவை அதிகரித்துள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisment
Advertisements

இந்தக் கோரிக்கை அரசால் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு, இடுபொருட்களின் விலை உயர்வை ஈடுசெய்திடவும். பால் உற்பத்தியை உயர்த்தி. கூட்டுறவு நிறுவனமான ஆவினுக்கு வழங்கிட வழிவகுத்திடவும், ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகையாக ஆவின் நிறுவனம் 18.12.2023 முதல் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.35-லிருந்து ரூ.38-ஆகவும். எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.44-லிருந்து ரூ.47 ஆகவும் உயரும். இதன்மூலம் சுமார் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள்.

பால் உற்பத்தியாளர்களின் நலனையும், நுகர்வோர் நலனையும் பாதுகாத்திட தேவையான அனைத்து உதவிகளையும் ஆவின் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும்இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது, ஆனால் உற்பத்தி செலவைக் காரணம் காட்டி கொள்முதல் விலையை மேலும் உயர்த்த வேண்டும் என்று பால் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Mk Stalin Aavin Milk Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: