காவல்துறையில் முக்கிய அறிவிப்புகள்; சைபர் குற்றங்களை தடுக்க புதிய திட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு

ஒருங்கிணைந்த ரயில்வே காவல் படையினர் ஒருங்கிணைந்த தலைமைக் கட்டுப்பாட்டு அறை அமைக்க உள்ளனர்.

ஒருங்கிணைந்த ரயில்வே காவல் படையினர் ஒருங்கிணைந்த தலைமைக் கட்டுப்பாட்டு அறை அமைக்க உள்ளனர்.

author-image
WebDesk
New Update
stalin

தமிழக காவல்துறைக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 29 சட்டசபையில் அறிவித்தார். அதில் காவல் துறைக்கு மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

Advertisment

பெருநகர சென்னை காவல்துறைக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவு, போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு மற்றும் சமூக ஊடக புலனாய்வு பிரிவு ஆகிய மூன்று புதிய பிரிவுகள் மொத்தம் ரூ .84 லட்சம் செலவில் கிடைக்கும் என்று ஸ்டாலின் கூறினார்.

மேலும் அரும்பாக்கம் சரகத்தில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்கப்படும். ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையிலும், பெரம்பூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனையிலும் போலீஸ் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றார்.

அதையடுத்து இங்குள்ள போலீஸ் தலைமையகத்தில் 'டார்க் வெப்' செயல்பாட்டை கண்காணிக்க ஒரு சிறப்பு பிரிவு குழு ரூ.2.10 கோடி செலவில் மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்றார்.

Advertisment
Advertisements

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கூடுதல் படையாக சென்னை தவிர, நகர ஆணையரகங்களுக்கு 80 பிங்க் பேட்ரோல் ரோந்து வாகனங்கள் ஒதுக்கப்படுவதாகவும் இந்த வாகனங்கள் ரூ.12 கோடி செலவில் வாங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.  

காவலர் நலனைப் பொறுத்தவரை, தொழில் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கான புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டது. புதிய தரம் உயர்த்தும் திட்டத்தில்,  கிரேடு-2 போலீஸ் கான்ஸ்டபிள் 10 ஆண்டுகளில் கிரேடு-1 ஆகவும், தற்போதுள்ள 5 ஆண்டுகளுக்கு பதிலாக 3 ஆண்டுகளில் தலைமை கான்ஸ்டபிள் பதவிக்கு உயர்த்தப்படுவார்கள். தலைமை காவலராக 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மதுரை மற்றும் திருவாரூரில் வெற்றிகரமாக படிப்புகளை முடித்துள்ள காவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய காவலர் நலத் திட்டமான 'மகிழ்ச்சி' மேற்கு மண்டலத்திற்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் இதற்காக ரூ.47 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள ரயில்வே காவல் நிறுவனங்கள் மற்றும் இதர மாநில காவல்துறையினருடன் சிறந்த முறையில் ஒருங்கிணைந்து செயல்பட இங்குள்ள அரசு ரயில்வே காவல் பணியாளர்களுக்காக மேம்பட்ட தகவல் தொடர்பு சாதனங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த தலைமை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்கச் செய்யும் படை மற்றும் மோப்ப நாய் பிரிவும் அனுமதிக்கப்பட்டது.

மாநில காவல்துறை, தடய அறிவியல் துறை மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு புதிய காவல் நிலையங்கள், கட்டடங்கள், குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளை முதல்வர் அறிவித்தார்.

Cm Mk Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: