Advertisment

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த மீனவர்கள் கைது; ஜெய்சங்கருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Stalin MK

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இந்த கைது தமிழக மீனவர்களின் உரிமையை பறிப்பதாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள், இலங்கை கடலோர காவல் படையினரால் கைத செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் நடவடிக்கை கோரி மு.க. ஸ்டாலின், ஜெய்சங்கருக்க கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை பறிப்பதாக உள்ளது.

Advertisment

மீனவ மக்களின் கலாசாரம், பொருளாதாரத்தை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இத்தகைய போக்கு பதற்றமான சூழலை உருவாக்கும். ஆகவே அரசு இதில் உடனே கவனம் செலுத்துவது அவசியம். மேலும், இந்த விவகாரம் கவலை அளிக்கிறது. மீனவர்களின் கைது தொடர் கதையாகி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு- நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 6 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது.

மீனவர்களிடம் இருந்த இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mk Stalin S Jaishankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment