தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தயாளு அம்மாவின் உடல் நிலை கண்காணிக்கப்படுவதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயார் தயாளு அம்மாளைப் பார்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்றார். மேலும் திமுக மூத்த தலைவர்களான துரைமுருகன் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு சென்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில் அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.