Advertisment

இந்தியா கூட்டணியைக் கண்டு மோடி அச்சத்தில் உள்ளார்; மும்பை பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் உண்மையான வெற்றி பா.ஜ.க.,வை தோற்கடித்து டெல்லியை கைப்பற்றுவதில் உள்ளது; இந்தியா கூட்டணியின் மும்பை பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

author-image
WebDesk
New Update
stalin mumbai

மும்பை பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பாரதீய ஜனதாவை விட பெரிய அச்சுறுத்தல் எதுவும் இந்தியாவுக்கு இல்லை என இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisment

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடா நீதி யாத்திரையின் நிறைவு விழா மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியதாவது; 

மக்களுக்காக உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளோம். மக்களின் இதயத்தை புரிந்து கொள்ளவே ராகுல்காந்தி இந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளார். நாடு முழுவதும் ராகுல்காந்திக்கு ஆதரவு அதிகரித்துள்ளதால் பா.ஜ.க.வின் தூக்கம் கலைந்துள்ளது. இந்தியாவிற்கு இப்போது ஒற்றுமை தான் தேவைப்படுகிறது அதை தான் ராகுல் காந்தி செய்து வருகிறார். ராகுல் காந்தியின் போராட்டம் தனி ஒரு மனிதனுக்காகவோ அல்லது காங்கிரஸ்கவோ இல்லை; அது இந்தியாவிற்கானது. 

பாரதீய ஜனதாவை விட பெரிய அச்சுறுத்தல் எதுவும் இந்தியாவுக்கு இல்லை. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் உண்மையான வெற்றி பா.ஜ.க.,வை தோற்கடித்து டெல்லியை கைப்பற்றுவதில் உள்ளது. பா.ஜ.க.வால் அழிக்கப்பட்ட தேசத்தை மீட்கவே ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை இன்று மும்பையை வந்தடைந்துள்ளது. விரைவில் டெல்லியை அடையும். ராகுல் காந்தியின் பயணம் விரைவில் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றி, கூட்டாட்சி தத்துவத்தை மதிக்கிற, அனைத்து தரப்பினருக்குமான, மதச்சார்பற்ற அரசை கட்டமைப்பதில் நிறைவடைய வேண்டும்.

இந்தியா கூட்டணியைக் கண்டு பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார். மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்தது 2 தான். ஒன்று வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வது, மற்றொன்று தவறான பிரச்சாரங்களை மேற்கொள்வது.

இந்தியா கூட்டணியை ஊழல் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார்; ஆனால் யார் அதை செய்கிறார்கள் என்பது தேர்தல் பத்திர விவகாரத்தில் வெளிப்படையாக தெரிய வருகிறது. தேர்தல் பத்திர நிதி மூலம் பா.ஜ.க. மிகப்பெரிய ஊழலை செய்துள்ளது. பா.ஜ.க ஒரு ஊழல் நிறைந்த கட்சி மற்றும் வெள்ளை காலர் ஊழலில் ஈடுபட்டது என்பதை தேர்தல் பத்திர மோசடி நிரூபித்துள்ளது. மோடி தனது மோசடிகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப எதிர்கட்சிகளை குற்றம் சாட்டுகிறார்.

இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். பா.ஜ.க.வின் பொய் பிரச்சாரத்தை இந்தியா கூட்டணி முறியடிக்கும். பா.ஜ.க.வை அகற்றுவதே இந்தியா கூட்டணியின் இலக்கு.” இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment