ஸ்டாலின் நாளை ராமநாதபுரம் வருகை: பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைப்பு

வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ராமநாதபுரம் அருகே பேராவூரில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளும் அவர், புதிய பஸ் நிலையம் உள்பட பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ராமநாதபுரம் அருகே பேராவூரில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளும் அவர், புதிய பஸ் நிலையம் உள்பட பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

author-image
WebDesk
New Update
WhatsApp Image 2025-10-01 at 12.53.39_ebebb975

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பயணம் செய்கிறார். ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்சா, எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் திரளாக சென்று அவருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் தங்குகிறார். வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ராமநாதபுரம் அருகே பேராவூரில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளும் அவர், புதிய பஸ் நிலையம் உள்பட பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும், சுமார் 54 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பார்த்திபனூர் முதல் ராமநாதபுரம் வரை வழிநெடுக திமுக கொடிகள் ஏற்றப்பட்டு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: