Advertisment

புதிய மருத்துவ கல்லூரிகள் விவகாரம்; மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

புதிய மருத்துவ கல்லூரி தொடங்குவது தொடர்பான மருத்துவ ஆணைய அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும்; பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

author-image
WebDesk
New Update
stalin and modi

புதிய மருத்துவ கல்லூரி தொடங்குவது தொடர்பான மருத்துவ ஆணைய அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும்; பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பான, தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பை நிறுத்தக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பினால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (4-10-2023) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், இத்தகைய கட்டுப்பாடு விதிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் புதிய மருத்துவமனைகளும், புதிய முதலீடுகளும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லாமல் போய்விடும் என்று குறிப்பிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென்றும், இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் உரிய ஆலோசனைகளை மேற்கொள்ள தேவையான அறிவுரைகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு வழங்கிட வேண்டுமென்றும் தனது கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Mk Stalin Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment