Advertisment

ஸ்டாலின் தூதுவர்: கனிமொழியின் உயர்வு, டெல்லியில் தி.மு.க குரல்!

நீண்டகாலமாக குடும்பப் பதற்றம் தீர்ந்துள்ள நிலையில், சமீபத்தில் தூத்துக்குடி எம்.பி.யை தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவராக தி.மு.க நியமித்தது. தேசிய அரங்கில் கட்சியின் மிக முக்கியமான தலைவராக அவரது நிலையை உறுதிப்படுத்துகிறது.

author-image
WebDesk
New Update
Stalins envoy In Kanimozhis elevation consensus about partys voice in Delhi

லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக தலைவர் கனிமொழிக்கு கட்சி தொண்டர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தி.மு.க எம்.பி கனிமொழி இந்த வார தொடக்கத்தில் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். இது, அவரின் உயர்வைக் குறிக்கிறது. மேலும், அவர் ஒரு முக்கிய தேசியப் பாத்திரத்தை ஏற்றுக்கொள்வதற்கான களத்தை அமைக்கிறது.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகளும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழி மூத்த கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய கப்பல் துறை அமைச்சருமான டி.ஆர்.பாலுவிடம் இருந்து, லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டிலும் கட்சியின் விவகாரங்களைக் கையாள வேண்டிய பதவிக்கு பொறுப்பேற்றுள்ளார்.

Advertisment

அடுத்த தலைமுறை தலைவர்களை தேசிய அரங்கிற்கு தயார்படுத்தும் உத்தியின் ஒரு பகுதியே கனிமொழியின் புதிய பங்கு என தி.மு.க உயர்மட்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர். முந்தைய லோக்சபாவில், கட்சியின் மூத்த தலைவர் டி.ஆர்.பாலு இந்த பதவியில் இருந்தார். கனிமொழியின் நியமனம் குறித்து கேட்டதற்கு “தமிழகத்தில் மு.க.ஸ்டாலின், டெல்லியில் கனிமொழி” என்று தி.மு.க தலைவர் ஒருவர் கூறியது போல, ஸ்டாலினின் தந்தைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் செயல்பட்டது போல, ஸ்டாலினுக்கு அவரது சகோதரி கனிமொழி செயல்படலாம்.

2019-ம் ஆண்டு முதல் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியான தூத்துக்குடியில் வளர்ந்து வரும் அவரது செல்வாக்கு காரணமாக, இந்தப் பணிக்கு அவர்தான் சரியானவர் என்று தி.மு.க தரப்பில் ஒருமித்த கருத்து நிலவுகிறது.

இந்த முறை, அவர் 3.93 லட்சம் வாக்குகளுடன் வெற்றி பெற்றார், இது அவர் 2019-ல் 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றதைவிட அதிகமாக பெற்றுள்ளார்.  “அவர் கட்சிக்காக சிறை சென்றார்” என்று ஒரு மூத்த தி.மு.க அமைச்சர் கூறினார், கனிமொழி 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் கைதானதைத் தொடர்ந்து திகார் சிறையில் கிட்டத்தட்ட 6 மாத காலம் கழித்தார்.

தி.மு.க தலைவர் ஒருவர் கூறுகையில், “ராஜ்யசபா எம்.பி சீட் எளிதாகக் கிடைத்திருக்கும் என்றாலும் அவர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழந்த தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பரில் தூத்துக்குடி வெள்ளத்தின் போது அவர் முக்கியப் பங்காற்றினார். இந்த நியமனம் குறித்து ஆச்சரியப்பட ஒன்றுமில்லை” என்றார்.

மற்றொரு மூத்த அமைச்சர், “2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் தலைவிதியைப் பொருட்படுத்தாமல், 2029 வரை தி.மு.க-வின் டெல்லி முகமாக கனிமொழி இருப்பார்” என்றார்.

கனிமொழியின் எழுச்சி

கவிஞராகவும், ஆர்வலராகவும், பத்திரிகையாளராகவும் தொடங்கிய கனிமொழி, ஆரம்பத்தில் பொது வாழ்வில் ஈடுபடவில்லை. ஜூலை 2007-ல், கருணாநிதி மற்றும் அவரது மருமகன்கள் தயாநிதி மற்றும் கலாநிதி மாறன் இடையேயான பதற்றங்களுக்கு மத்தியில், அவர் ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் டெல்லியில் தனது தந்தையின் நம்பிக்கைக்குரிய தூதராக பணியாற்றினார், இது ஒரு காலத்தில் முரசொலி மாறன் செய்த வேலை ஆகும்.

அதைத் தொடர்ந்து, அரசியல் ரீதியாக கனிமொழியின் பங்கு என்ன, அது ஸ்டாலினை எப்படிப் பாதிக்கும் என்பது பற்றிய கவலைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், 2019-ல் கருணாநிதி இறந்த பிறகும், 2021-ல் ஸ்டாலின் முதல்வர் ஆன பிறகும் குடும்பத்தில் கணக்குகல் மாறியது. . ஸ்டாலின் இப்போது “கட்சியிலும் குடும்பத்திலும் மகத்தான பங்கை ஏற்றுவிட்டார்” என்று தி.மு.க-வின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

ஸ்டாலினுக்கும் கனிமொழிக்கும் இடையே பிரச்னைக்கு வாய்ப்பில்லை என்று தி.மு.க தலைவர் ஒருவர் கூறினார். தி.மு.க-வின் முதல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், அவர் அரசியல் ரீதியாக தனது பங்கில் பெரும்பாலும் மகிழ்ச்சியற்றவராக காணப்பட்டார்.

அவருக்கு நெருக்கமானவர்கள் ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு எதிராக சதி செய்ததாக சந்தேகிக்கப்பட்டது. ஆனால், அவர் ஸ்டாலினுக்கோ அல்லது அவரது மகனுக்கோ போட்டியாளர் அல்ல என்று ஸ்டாலின் குடும்பத்திற்கு தெளிவான சமிக்ஞையை அனுப்பும் வகையில் அதை முடித்தார்.

கருணாநிதி மகளான கனிமொழி ஸ்டாலினிடம் உறுதியளித்ததாகவும், கருணாநிதி இல்லாத நேரத்தில் அப்பாவை நினைவூட்டியதாகவும் அந்த வட்டாரம் தெரிவித்தது.

திமுக வட்டாரங்கள், பெயர் வெளியிடக் கோரும் வகையில், கனிமொழி, “அவருக்கு என்ன வேண்டும் என்பது இப்போது தெரியும். கட்சித் தலைவர் ஒருவர் கூறுகையில், அவருக்கு தெளிவு உள்ளது. உதயநிதி அவரை அத்தை என்று அழைக்கிறார், ஸ்டாலின் தந்தை பாத்திரத்தை ஏற்றுள்ளார்.

லோக்சபா தேர்தலில், அவர் (ஸ்டாலின்) தூத்துக்குடியில் அவரது பிரச்சாரங்களில் ஆர்வமாக இருந்தார், கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அதைக் கண்காணித்தார்.

அந்த குடும்பத்தில் இருக்கும் மற்றொரு நபர் கூறுகையில், கனிமொழி ஒருபோதும் "ஆக்ரோஷமாகவோ அல்லது லட்சியமாகவோ" இருந்ததில்லை என்று கூறினார். ஸ்டாலினையும் உதயநிதியையும் தாக்கியவர்களிடம் இருந்து விலகி ஸ்டாலினுக்கும் கனிமொழிக்கும் இடையேயான உறவு வலுப்பெற்றது.

அவரால் அச்சுறுத்தல் இல்லை என்று குடும்பம் உறுதியாக நம்பியதால், அவருக்கு இப்போது முக்கியமான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் வாசிக்க : Stalin’s envoy: In Kanimozhi’s elevation, consensus about party’s voice in Delhi 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Dmk Mp Kanimozhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment