Advertisment

சிலைக்கடத்தல் வழக்குகள்: சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் தடை!

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது எப்படி அரசாணை விதிக்க முடியும்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சிலை கடத்தல் வழக்கு

Temple statue abduction case in HC

சிலைக் கடத்தல் வழக்கு: சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன் மாணிக்க வேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சிலைக்கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்குகளை சிபிஐ க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு பிரிவு அமைத்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், அந்த உத்தரவை மீறும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், சிலைக் கடத்தலில் தொடர்புடைய அமைச்சர்கள், மூத்த அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளை காப்பாற்றும் நோக்குடன் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விசாரணை அமைப்பிலிருந்து ஐஜி பொன்.மாணிக்கவேலை நீக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஆர். மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உள்நோக்கத்துடன் இந்த அரசாணை பிறப்பிக்கப்படும் உயர் அதிகாரிகளை பாதுகாக்க வேண்டும், முக்கிய நபர்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் தான் அரசு இந்த அரசாணையை பிறப்பித்திருப்பதாகவும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இதுவரை விசாரணைக்கு அரசு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்காத நிலையில், அவசர அவசரமாக வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது உள்ளதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர், இது அரசினுடைய கொள்கை முடிவு எனவும் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து அரசுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும், எனவே இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கூடாது எனவும் வாதிட்டார். மேலும் இந்த அரசாணை தொடர்பாக தங்கள் தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி கேட்டனர். ஒரு நிமிடம் கூட நீடிக்க தகுதியில்லாத அரசாணை இது என்றும், பொதுமக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அக்கறை காட்டி அரசு அராசணை போடவில்லையே? என்று கேள்வி எழப்பிய நீதிபதி. இந்த அரசாணை விதிக்க காரணம் என்ன? வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது எப்படி அரசாணை விதிக்க முடியும்? இது நீதிமன்ற அவமதிகக்கும் செயல் என்றும் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்.

சிலை கடத்தல் வழக்கில் இந்த நீதிமன்றம் பல உத்தரவு போட்டது. இதுவரை ஒன்று கூட தமிழக அரசு செய்யவில்லை என்று கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறபித்த அரசாணைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும் வழக்கின் விசாரணையை நாளை தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment