/indian-express-tamil/media/media_files/2025/09/14/madurai-high-court-5-2025-09-14-16-24-35.jpg)
இந்த வழக்கில் சுரேஷின் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவர் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் 2018 மே 22-ம் தேதி நடைபெறுவதற்கு முன்னதாகவே அன்றைக்கு மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலும், மக்கள் கும்பலாகக் கூடிச் சட்டவிரோதமாக கலவரம் செய்ததாகவும், காவல்துறையினரை மிரட்டி கற்கள் வீசி பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
நிலைமை மோசமடைந்ததால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கான விசாரணையை சி.பி.ஐ மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கில் சுரேஷின் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவர் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் உள்ள நிலையில், தனது குடும்பம் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, எந்த தொடர்பும் இல்லாத வழக்கில் தன்னை விடுதலை செய்யுமாறு அவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்தி தீர்ப்பளித்த நீதிபதி, சுரேஷ் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும், மறு உத்தரவு வரும் வரை வாரம் ஒருமுறை கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.