/tamil-ie/media/media_files/uploads/2022/12/water-tank_7279.jpg)
புதுகோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மலம் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே பட்டிலின குடியிருப்பு உள்ளது. இந்நிலையில் அங்கு வசிக்கும் மக்களுக்கு குடி தண்ணீர் விநியோகம் செய்ய 10.000 லிட்டர் தண்ணீர் தொட்டி உள்ளது.
இந்நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு கடும் உடல் உபாதைகள் ஏற்படுள்ளது. இந்நிலையில் இதற்கு காரணம் அவர்களை குடித்த தண்ணீர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்தபோது, அதில் மலம் கலந்திருப்பது தெரியவதுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். மேலும் கந்தர்வகோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களிடம் இது தொடர்பாக கேட்டறிந்தார். இந்நிலையில் இதற்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.