புயலுக்கு இதுதான் பெயர்: எங்கே கரையை கடக்கும் ?.. வானிலை மையம் முக்கிய அறிவிப்பு

வங்க கடலில் உருவாகி உள்ள புயலுக்கு ’மிக்ஜாம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புயல் வட தமிழகத்தில் சென்னைக்கும் தெற்கு ஆந்திரா மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவாகி உள்ள புயலுக்கு ’மிக்ஜாம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புயல் வட தமிழகத்தில் சென்னைக்கும் தெற்கு ஆந்திரா மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
sada

வங்க கடலில் உருவாகி உள்ள புயலுக்கு ’மிக்ஜாம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புயல் வட தமிழகத்தில் சென்னைக்கும் தெற்கு ஆந்திரா மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 3ம் தேதி தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில்  புயலாக வலுப்பெற்றுள்ளது. டிசம்பர் 4ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது. தெற்கு ஆந்திரா- வட தமிழகத்தின் இடைப்பட்ட பகுதியான சென்னைக்கும் தெற்கு ஆந்திராவின் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே ’மிக்ஜாம்’ புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, நாகை, காரைக்கால், கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: