Advertisment

எச். ராஜாவை கண்டித்து அறநிலையத்துறையினர் உண்ணாவிரத போராட்டம்!

தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன், முத்தரசன், பழ.நெடுமாறன் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அறநிலையத்துறை

அறநிலையத்துறை

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவைக் கண்டித்து அறநிலையத்துறையின் அனைத்து அதிகாரிகளும் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Advertisment

அறநிலையத்துறையினர் போராட்டம்:

கடந்த 2 ஆம் தேதி, இந்து அமைப்பினரை ஒருங்கிணைத்து, வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் அடையாளப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா அந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைப்பெற்ற கூட்டத்தில் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் குறித்தும், அவர்களின் குடும்பத்தார் குறித்தும் அவதூறாக பேசியதாக ஏச். ராஜா பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தினார்கள். இதையடுத்து, நாகர்கோவில் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அறநிலையத்துறையில் உள்ள பெண்கள் குறித்தும், அதிகாரிகள் வீட்டுப் பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஹெச்.ராஜாவைக் கண்டித்து, இன்று (27.918) காலை 9 மணி முதல் 5 மணி வரை, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் தமிழகம் முழுதும் உள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன், முத்தரசன், பழ.நெடுமாறன் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.

H Raja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment