அரியலூர் மாணவி அனிதா, பிளஸ்டூவில் மாநில பாடத்தில் படித்தவர். 1178 மதிபெண் பெற்ற அவர் நீட் தேர்வில் தேர்வு பெற முடியாமல் போனவர். நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை கூடாது என சென்னை ஐகோர்ட், சுப்ரிம் கோர்ட் வரையில் போராடினார். ஆனால் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கல்லூரிக்கு அட்மிஷன் முடிந்துவிட்டது.
சிறுவயதிலேயே தாயை இழந்த கிராமத்துப் பெண்ணான அவர், மருத்துவம் படித்து கிராம மக்களுக்கு மருத்துவ்வ சேவை செய்ய விரும்பினார். தன்னுடைய கனவு பொய்த்துப் போனதால் கடந்த 1ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து சென்னையில் பல இடங்களில் மாணவர்கள், மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் புகைப்பட தொகுப்பு.