/indian-express-tamil/media/media_files/2025/08/13/villupuram-private-school-2025-08-13-18-26-31.jpg)
புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவர் மோகன்ராஜ் புதன்கிழமை காலை பள்ளியில் திடீரென மயக்கம் அடைந்து உயிரிழந்தார்.
விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. விழுப்புரத்தில் பிரபலமான பள்ளி இது. இங்கே ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் படித்து வருகின்றனர். 11-ம் வகுப்பு படிக்கும் மோகன்ராஜ் கடந்த எல்.கே.ஜி முதல் இந்த பள்ளியில் தான் படித்து வருகிறார்.
10, 11, 12 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு இப்பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது .
அதனால் மாணவர்கள் காலையில் ஏழு மணிக்கு பள்ளிக்கு வந்து விட வேண்டும். அது போன்று மாலை 6மணிக்கு வீட்டிற்கு அனுப்பப்படுகின்றனர். வழக்கம்போல், இன்று காலை 7மணிக்கு மோகன்ராஜ் வகுப்பறைக்கு வந்துள்ளார்.
அப்போது வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த மோகன்ராஜ் சக மாணவர்கள் தூக்கி தண்ணீர் கொடுத்துள்ளனர். ஆனால், எந்த பதிலும் இல்லாததால் உடனே பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. பள்ளி நிர்வாகம் உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்துள்ளனர் அப்போது அவருக்கு ஆக்சிஜன் லெவல் குறைந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
உடனடியாக சிகிச்சைக்காக வேறொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அந்த மருத்துவமனையில் அவர் இறந்து விட்டதாக உறுதிப்படுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக விழுப்புரம் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆசிரியர்கள் கொடுத்த மன அழுத்தத்தால் மாணவன் இறந்தாரா அல்லது வேறு எதற்காக இறந்தார் என பிரேத பரிசோதனை வந்த பிறகு தெரியும் என காவலர்கள் தெரிவித்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - விழுப்புரம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.