ஆளுநர் செயலை கண்டித்த மாணவர் கூட்டமைப்பு: சென்னையில் போராட்டம்

சென்னை ஆளுநர் மாளிகைக்கு அருகில் இருக்கக்கூடிய சின்னமலை சாலை சந்திப்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை ஆளுநர் மாளிகைக்கு அருகில் இருக்கக்கூடிய சின்னமலை சாலை சந்திப்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

author-image
WebDesk
New Update
RN Ravi

ஆளுனர் ஆர்.என். ரவி

பல்கலைக்கழகங்களின் சுயாட்சி தன்மையை முடக்குகின்ற வகையில் ஆளுநர் செயல்படுவதாக கண்டனம் தெரிவித்து சென்னை சின்னமலையின் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

தமிழ்நாடு அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட பல்கலைக்கழகங்களின் சுயாட்சி தன்மையை முடக்குகின்ற வகையில் அரசியல் சட்டவிதிகளை முரணாக செயல்படுகின்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை ஆளுநர் மாளிகைக்கு அருகில் இருக்கக்கூடிய சின்னமலை சாலை சந்திப்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் மற்றும் நிருபன் சக்கரவர்த்தி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகளின் தலைமையில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

Advertisment
Advertisements

உடனடியாக தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில், பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்ட முன்வடிவுகளை வழங்கிட ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: