கடலூரில் அரசுப் பேருந்தில் இருந்து விழுந்து படுகாயமடைந்த மாணவிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பேருந்தை நிறுத்துவது போல் சென்று, திடீரென எடுத்ததால், கீழே விழுந்து விட்டதாக மாணவி தரப்பில் புகார் கூறியதை அடுத்து, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடலூரில் அரசுப் பேருந்தில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்த கல்லூரி மாணவி படு காயமடைந்தார். அரசுப் பேருந்தை நிறுத்துவது போல் சென்று, திடீரென எடுத்ததால் கீழே விழுந்து விட்டதாக மாணவி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து காயமடைந்த மாணவிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அரசுப் பேருந்தை நிறுத்துவது போல் சென்று, திடீரென எடுத்ததால் மாணவி கீழே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், பேருந்தை அலட்சியமாக ஓட்டியதால், தற்காலிக ஊழியர்களான டிரைவர் ரகோத்தமன் மற்றும் நடத்துநர் ஜெயபால் ஆகியோரை பணி நீக்கம் செய்வதாக கடலூர் அரசு போக்குவரத்து கழகம் உத்தரவு பிரப்பித்துள்ளது.