/tamil-ie/media/media_files/uploads/2022/05/train-died.jpg)
செங்கல்பட்டிலிருந்து கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவன், தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த மாணவன் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த ஜேசுரான் துறை (19) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
செவ்வாய்க்கிழமை காலை, வழக்கம் போல் கல்லூரி செல்வதற்காகச் செங்கல்பட்டிலிருந்து கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் துரை ஏறியுள்ளார். காலை நேரம் என்பதால் ரயில் கூட்டமாக இருந்துள்ளது. இதன் காரணமாக, அவர் படிக்கட்டில் பயணம் செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதாக காவல் துறையின் தெரிவிக்கின்றனர். வண்டலூர் முதல் பெருங்களத்தூர் வரை அதிகளவில் பயணிகள் ரயிலில் ஏறுவதால், அனைத்து பெட்டிகளிலும் மக்கள் படிக்கட்டில் பயணம் செய்வதை காண முடியும்.
இரும்புலியூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது, தண்டவாளத்தின் அருகிலிருந்த மின் கம்பியில் ஜேசுரான் துறை இடித்ததில், ரயிலிலிருந்து கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தாம்பரம் ரயில்வே காவல் துறையினர், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததை உறுதிசெய்தனர்.
அவரது உடல் உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.