/indian-express-tamil/media/media_files/2025/07/20/aadhaar-dpi-2025-07-20-14-25-49.jpg)
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் நலத்திட்டங்களைப் பெறுவதற்கான பல்வேறு ஆவணங்களைக் குறிப்பிட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பயனாளிகள் ஆதார் வைத்திருக்க வேண்டும்
அல்லது ஆதார் அங்கீகாரத்துக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையின் கிழ் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், விலையில்லா சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பலன்களப் பெறும் பயனாளிகள் ஆதார் வைத்திருக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்துக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
மேலும், பள்ளிக்கல்வித் துறையின் கீழ் நலத்திட்டங்களைப் பெறுவதற்கான பல்வேறு ஆவணங்களைக் குறிப்பிட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், பயனாளிகள் ஆதார் வைத்திருக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்துக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, ஆதார் எண் கிடைக்காத பட்சத்தில் கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவைகளில் ஏதாவது ஒன்றை வழங்கலாம். ஆதார் அங்கீகாரம் பெறும்போது விரல் ரேகை பதிவில் சிக்கல் ஏற்பட்டால் முகத்தை ஸ்கேன் செய்து அங்கீகாரம் பெறலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.