தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது என்று பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
காவிரியில் இருந்து ஆண்டுதோறும் 192 டிஎம்சி தண்ணீரை திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடக அரசு, வெறும் 111 டிஎம்சி தண்ணீரை மட்டுமே திறந்துள்ளது. மீதமுள்ள 82 டிஎம்சி நீரை திறந்து விட கர்நாடகா மறுப்பு தெரிவித்துள்ளதால் காவிரி டெல்டா பகுதிகளில் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் காவிரியில் நீர் திறப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்து, இதற்காக நேரம் ஒதுக்குமாறு கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் கேட்டிருந்தார். ஆனால், இப்போது வரை சந்திப்பு குறித்து கர்நாடக அரசு எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் காவிரி விவகாரத்தில் புதிய வழக்கை தொடர தமிழக அரசு உத்தேசித்துள்ளது.
இந்நிலையில் பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்கவே கிடைக்காது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஓபிஎஸ், ஈபிஎஸ் என்னிடம் கேட்டால் நான் ஏற்பாடு செய்வேன். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை இத்தாலியில் இருந்து என்னால் 3 மாதத்தில் கொண்டு வரமுடியும்" என்று தெரிவித்தார்.
சுப்ரமணியன் சுவாமியின் இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுகுறித்து பதில் அளித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை, "காவிரி விவகாரத்தில் சுப்ரமணியன் சுவாமி கூறிய கருத்து பாஜகவுடையது அல்ல. அதுஅவரது தனிப்பட்ட கருத்தாகும். சுப்ரமணியன் சுவாமி பாஜகவுக்கு எதிராகவே கருத்து தெரிவிப்பவர்" என்றார்.
தமிழகத்துக்கு காவிரி நீர் நிச்சயம் கிடைக்காது! - சுப்ரமணியன் சுவாமி
தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது என்று பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்
Follow Us
தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது என்று பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
காவிரியில் இருந்து ஆண்டுதோறும் 192 டிஎம்சி தண்ணீரை திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடக அரசு, வெறும் 111 டிஎம்சி தண்ணீரை மட்டுமே திறந்துள்ளது. மீதமுள்ள 82 டிஎம்சி நீரை திறந்து விட கர்நாடகா மறுப்பு தெரிவித்துள்ளதால் காவிரி டெல்டா பகுதிகளில் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் காவிரியில் நீர் திறப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்து, இதற்காக நேரம் ஒதுக்குமாறு கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் கேட்டிருந்தார். ஆனால், இப்போது வரை சந்திப்பு குறித்து கர்நாடக அரசு எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் காவிரி விவகாரத்தில் புதிய வழக்கை தொடர தமிழக அரசு உத்தேசித்துள்ளது.
இந்நிலையில் பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்கவே கிடைக்காது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஓபிஎஸ், ஈபிஎஸ் என்னிடம் கேட்டால் நான் ஏற்பாடு செய்வேன். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை இத்தாலியில் இருந்து என்னால் 3 மாதத்தில் கொண்டு வரமுடியும்" என்று தெரிவித்தார்.
சுப்ரமணியன் சுவாமியின் இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுகுறித்து பதில் அளித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை, "காவிரி விவகாரத்தில் சுப்ரமணியன் சுவாமி கூறிய கருத்து பாஜகவுடையது அல்ல. அதுஅவரது தனிப்பட்ட கருத்தாகும். சுப்ரமணியன் சுவாமி பாஜகவுக்கு எதிராகவே கருத்து தெரிவிப்பவர்" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.