/indian-express-tamil/media/media_files/2025/03/06/XSpmcdHc8kJgdOhwIJDx.jpg)
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஐ.பி.எஸ். அதிகாரியான சுதாகர் தற்போது சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வருகிறார்.
சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் ஐ.பி.எஸ், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குநர் ஜெனரலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் துணை இயக்குநராக அடுத்த 5 ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை பதவியில் இருப்பார்.
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஐ.பி.எஸ். அதிகாரியான சுதாகர் தற்போது சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சுதாகர் தற்போது மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஐ.பி.எஸ் அதிகாரி சுதாகரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குநராக சுதாகரை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவர் 5 ஆண்டுகளோ அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையிலோ அந்தப் பதவியில் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.