கோடை விடுமுறை: கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்; ஒரே நாளில் 1000 பேர் வருகை

நேற்று ஒரே நாளில் கோவை  குற்றலாத்திற்கு 1000-க்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர் என வனத்துறை தகவல்

நேற்று ஒரே நாளில் கோவை  குற்றலாத்திற்கு 1000-க்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர் என வனத்துறை தகவல்

author-image
WebDesk
New Update
 Kov Kut.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோடை விடுமுறையொட்டி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Advertisment

 Kov Kut1.jpg

விடுமுறையை கொண்டாட பொது மக்கள் குடும்பத்துடன் கோவை குற்றாலத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். கோவை சாடிவயல் அருகே உள்ள கோவை குற்றாலத்தில் கோடை விடுமுறையையொட்டி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வரத்தும் இருந்ததால் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.

 Kov Kut2.jpg

Advertisment
Advertisements

சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் அருவிக்கு சென்று வர கூடுதல் வாகனங்கள் இயக்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். நேற்று ஒரே நாளில் கோவை  குற்றலாத்திற்கு 1000-க்கும் மேற்பட்டோர் வருகை தந்து உள்ளனர் என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 Kov Kut.jpg

செய்தி: பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

    coimbotore

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: