/tamil-ie/media/media_files/uploads/2019/05/template-40.jpg)
Rajinikanth on Hindi Imposition
Super Star Rajinikanth: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இந்தி திணிப்பு மீண்டும் பேசு பொருளாகியுள்ளது. மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக பல்வேறு அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் தங்களது கருத்துகளை முன் வைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். அவரிடம் இந்த இந்தி திணிப்பு சம்பந்தமான கேள்வியை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, “எந்தவொரு நாட்டுக்கும் பொதுவான மொழி இருந்தால், அது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது.
ஆனால் துரதிஷ்ட வசமாக நம் நாட்டில் அனைவருக்கும் பொதுவான மொழியைக் கொண்டு வர முடியாது. இந்தி மட்டுமல்ல, எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. இந்தியை திணித்தால் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழ் நாட்டில் மட்டுமல்ல, தென்னிந்தியாவிலும், வட நாட்டின் பல மாநிலங்களிலும் கூட இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டர்கள்” என்ற அவர், பேனர் சம்பந்தமான கேள்விக்கு, பேனர் வைக்க வேண்டாம் என்று ஏற்கனவே தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.