scorecardresearch

கனிமொழி வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு; தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தி.மு.க துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யு-மான கனிமொழி, 2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Supreme Court dismissed the election petition against kanimozhi Karunanidhi, DMK MP kanimozhi, கனிமொழி வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு, தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு, Supreme Court dismissed the election petition against kanimozhi, DMK MP
கனிமொழி வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு, தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு,

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி வெற்றி பெற்றதை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு, கனிமொழி தூத்துக்குடி தொகுதி எம்.பி-யாக வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி கனிமொழி சார்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கனிமொழிக்கு எதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

2020-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

கனிமொழியின் வெற்றியை எதிர்த்து ஏ.சந்தான குமார் தாக்கல் செய்த மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கனிமொழி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

“தெளிவற்ற மற்றும் ஆதரமற்ற உண்மை இல்லாத” ஒரு மனுவை உயர் நீதிமன்றம் தவறாகப் விசாரிப்பதாக கனிமொழி சார்பில் வாதிட்டார்.

மூத்த வழக்கறிஞர் வில்சன், “ஏ.சந்தானகுமார் தனது தேர்தல் மனுவில், கனிமொழியின் வேட்புமனு முறையற்றது என்று தனது வழக்கை நிரூபிக்கும் வகையில் எந்த ஒரு உண்மையையும் கொண்டு வரவில்லை” என்று வாதிட்டார். உண்மையில், தேர்தல் மனுவில் வெற்றுக் குற்றச்சாட்டுகள் உள்ளதாக மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.

கனிமொழி தனது மனைவியின் நிரந்தர கணக்கு எண்ணை (பான்) வெளியிட மறுத்ததாக உயர்நீதிமன்றம் தொடர்ந்தது. கணவரிடம் பான் கார்டு இல்லை என்று தனது வேட்புமனு பதிவேட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக திருமதி கனிமொழி தெரிவித்துள்ளார்.

“மனுதாரர் கனிமொழி தனது கணவருக்கு பான் எண் இல்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதை எதிர் தரர்ப்பு சந்தான குமார் இந்த தகவல் தவறு என்று வாதிட்டால், அந்த தகவல் தவறானது என்ற குற்றச்சாட்டை அவர் நிரூபிக்க வேண்டும். இந்த நிபந்தனைகள் இல்லாமல், உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளின்படி, மனுதாரர் தனது கணவரின் பான் எண்ணை வழங்கவில்லை என்ற தெளிவற்ற அறிக்கையை தேர்தல் மனுவில் பராமரிக்க முடியாது” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுதாரர் கனிமொழியின் கணவரின் வருமான வரி ஆதார் எண் தொடர்பாக, தேர்தல் வேட்புமனுவில், உயர் நீதிமன்றத்தின் தரப்பில் குறைகள் சேர்க்கப்படுவது நியாயமா என்றும், கனிமொழி கேட்டிருந்தார்.

“கனிமொழியின் கணவருக்கு சிங்கப்பூரில் பான் கார்டு அல்லது அதுபோன்ற அட்டை உள்ளது என்று தேர்தல் வழக்கு தொடர்ந்து மனுதாரர்கூட ஒப்புக்கொள்ளாத நிலையில், உயர்நீதிமன்றம் அத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்தது சரியானதா?” என்று இந்த வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.

இதையடுத்து, தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி, 2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Supreme court dismissed the election petition against kanimozhi dmk mp

Best of Express