ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதற்கு தடை விதிக்க முடியாது என தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவில் தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த குழு விரைவில் ஆய்வை தொடங்க உள்ள நிலையில், பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை பசுமை தீர்ப்பாயம் விசாரிப்பதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். ஆய்வுப் பணிகள் நடத்தவும் தடை விதிக்கவில்லை.
எந்த அடிப்படையில் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை கேட்கிறீர்கள்? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிமன்றம், குழுவின் ஆய்வறிக்கை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குழு அறிக்கை அளித்தால்தான் ஆலை மூடப்படும் என்றும் தெரிவித்தது.
அதேசமயம் ஸ்டெர்லைட் ஆய்வு தொடர்பாக தமிழக அரசின் வாதத்தை கேட்காமல் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.