கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ விசாரணை கோரி பா.ஜ.க நிர்வாகி மேல்முறையீடு; மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், பா.ஜ.க நிர்வாகி உமா ஆனாந்தன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அக்டோபர் 10-ம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், பா.ஜ.க நிர்வாகி உமா ஆனாந்தன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அக்டோபர் 10-ம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
supreme court vijay stampede 2

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்ற த.வெ.க தலைவர் விஜயின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் நாட்டையே உலுக்கியது.

கரூரில் த.வெ.க தலைவர் விஜயின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், பா.ஜ.க நிர்வாகி உமா ஆனாந்தன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அக்டோபர் 10-ம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisment

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்ற த.வெ.க தலைவர் விஜயின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் நாட்டையே உலுக்கியது. 

இந்த வழக்கில் கரூர் மாவட்ட த.வெ.க நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரி பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரிக்கப்பட்டு வருவதால் அந்த வழக்குடன் இணைந்து கொள்ளுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில், கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரி பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனாந்தன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு முன்பு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம் அக்டோபர் 10-ம் தேதி விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisment
Advertisements
Supreme Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: