/indian-express-tamil/media/media_files/NmxdZNtZb3iJ31OEajc6.jpg)
கள்ளர், மறவர், அகமுடையார் கொண்ட முக்குலத்தோர் சமுதாயத்தை ‘தேவர்' என்ற பெயரில் அழைக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையோர் ஆகியோரை தேவர் சமுதாயம் என அறிவிக்கப்பட்டது. இந்த அரசாணையை நடைமுறைப்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையோரை தேவர் சமூகம் என்ற பெயரில் அழைப்பது தொடர்பாக 1995ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
இதனை நடைமுறைப்படுத்தவில்லை என வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழ்நாடு அரசின் கொள்கை சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் ஸ்டாலின் தொடர்ந்த மேல்முறையீடு மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின் உயர் நீதிமன்றக் கிளையில் 2011-ல் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் கள்ளர், மறவர், அகமுடையார் சேர்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தை ‘தேவர்' என்ற ஒரே பெயரில் அழைக்கக்கோரி 11.9.1995-ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணை இதுவரை அமல்படுத்தப்படவில்லை.” அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு2024 ஜனவரி மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.