அயோத்தி விழாவை ஒளிபரப்ப தமிழகத்தில் தடை விதித்ததாக வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

அயோத்தி விழாவை ஒளிபரப்ப தமிழகத்தில் தடை விதித்ததாக தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அயோத்தி விழாவை ஒளிபரப்ப தமிழகத்தில் தடை விதித்ததாக தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அயோத்தி விழாவை ஒளிபரப்ப தமிழகத்தில் தடை விதித்ததாக தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை தனியார் மற்றும் அரசு கட்டுப்பட்டில் உள்ள கோவில்களில் நேரல் செய்ய அனுமதி மறுப்பதாக கூறியும், கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்ககூடாது என காவல்துறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யக்கோரி பாஜகவை சேர்ந்த வினோஜ் பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேரலை, ராமர் பெயரில் பூஜை  ஆகியவற்றை  வாய்மொழி உத்தரவு  கொண்டு தடுகக்கூடாது என்று தெரிவித்தனர்.

வாய்மொழி உத்தரவை ஏற்று காவல்துறை செயல்படக்கூடாது.சட்டபடி எதற்கு  அனுமதிகப்பட்டதோ அதை அமைதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Advertisment
Advertisements

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான கூடுதல்  சொலிசிட்டர் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி வாதாடும்போது, ராமர் கோவில் கும்பாபிஷேக நேரலைக்கு எவ்வித தடையும் இல்லை என்றும், இந்த மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் தெரிவித்தனர். இந்த வழக்கில் வரும் 29ம் தேதி தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: