சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு: தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து செய்து விடுதலை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சென்னை போரூரில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், இளைஞர் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்தும் விடுதலை செய்தும் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை போரூரில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், இளைஞர் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்தும் விடுதலை செய்தும் உத்தரவிட்டு உள்ளது.

author-image
WebDesk
New Update
dhashwanth supreme court

சிறிமி கொலை வழக்கில் ஆதாரங்களாக சமர்பிக்கப்பட்ட வீடியோக்கள், சிசிடிவி காட்சிகள், மரபணு பரிசோதனை ஒத்துப்போக வில்லை என்று குறிப்பிட்டு, தஷ்வந்த்தை வழக்கில் இருந்து விடுத்து நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளனர்.

2017-ம் ஆண்டு சென்னையை அடுத்த போரூரில் 6 வயது சிறுமியை பக்கத்து வீட்டில் இருந்த தஷ்வந்த் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து, எரித்துக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்த கொடூர வழக்கில், போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதத்தை சுட்டிக்காட்டி தஷ்வந்த் ஜாமின் கோரியதால் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.

Advertisment

ஜாமினில் வெளியே வந்த தஷ்வந்த், வீட்டில் இருந்த தனது தாயை அடித்துக் கொலை செய்துவிட்டு, நகைகளுடன் மும்பை சென்றார். இந்த கொலை தொடர்பாக போலீசாரின் தீவிர தேடுதலுக்குப் பின்னர் தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்த தஷ்வந்த், தாயைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. 

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்த, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம், 2018-ம் ஆண்டு தஷ்வந்த்க்கு மரண தண்டனை விதித்தது.

அதே நேரத்தில், தாயை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில், தஷ்வந்த்தின் தந்தை பிறழ் சாட்சியாக மாறியதால் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி செங்கல்பட்டு நீதிமன்றம் தஷ்வந்த்தை விடுவித்தது. 

Advertisment
Advertisements

சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில், மரண தண்டனையை உறுதி செய்ததால், அதை எதிர்த்து, தஷ்வந்த் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில், போரூரில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்து வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது. 

சிறிமி கொலை வழக்கில் ஆதாரங்களாக சமர்பிக்கப்பட்ட வீடியோக்கள்,  சிசிடிவி காட்சிகள், மரபணு பரிசோதனை ஒத்துப்போக வில்லை என்று குறிப்பிட்டு, தஷ்வந்த்தை வழக்கில் இருந்து விடுத்து நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளனர்.

Supreme Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: