/indian-express-tamil/media/media_files/2025/09/08/supreme-court-x-2025-09-08-14-05-11.jpg)
தமிழக அரசு தரப்பில், புதிய டி.ஜி.பி பதவிக்கான நியமன செயல்முறை நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்தது.
தமிழ்நாடு காவல்துறையில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி ஓய்வு பெற்றார். இதனால், ஐ.பி.எஸ் அதிகாரி வெங்கட்ராமனை பொறுப்பு டி.ஜி.பி-யாக தமிழக அரசு நியமனம் செய்து அறிவித்தது. வெங்கட்ராமன் பொறுப்பு டி.ஜி.பி-யாக பொறுப்பேற்று பணிகளைச் செய்து வருகிறார்.
பொறுப்பு டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டுள்ள வெங்கட்ராமன் பணி மூப்பு அடிப்படையில், 9வது இடத்தில் உள்ளார் என்றும் பணி மூப்பில் அவரைவிட 8 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளனர் என்று விமர்சனங்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து, பொறுப்பு டி.ஜி.பி-யாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் புதிய டி.ஜி.பி ஓய்வுபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே டி.ஜி.பி பதவிக்கு தகுதியானவர்களின் யு.பி.எஸ்.சி-க்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அத்தகைய நடைமுறைகளப் பின்பற்ற வில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழக அரசின் இந்நடவடிக்கை 2015-ம் ஆண்டு பிரகாஷ் சிங் வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு தரப்பில், புதிய டி.ஜி.பி பதவிக்கான நியமன செயல்முறை நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு திங்கள்கிழமை (08.09.2025)உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், டி.ஜி.பி நியமன நடவடிக்கைகளை யு.பி.எஸ்.சி ஆணையம் விரைவாக பரிசீலிக்க வேண்டும். யு.பி.எஸ்.சி அளித்த பரிந்துரையின் பேரில், வழக்கமான முறையில் டி.ஜி.பி.யை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.