scorecardresearch

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கில் காரசார விவாதம்; மீண்டும் விசாரணை தள்ளி வைப்பு

பொதுக்குழுவை ஆண்டுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும். தேவைப்பட்டால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட முடியும் – ஓ.பி.எஸ் தரப்பு

Tamil news, latest tamil news, Tamilnadu news, Chennai news, Tamil nadu politics news, latest news in tamil, aiadmk geneal council case, aiadmk, supreme court

ஒற்றை தலைமை விவகாரத்திற்கு பின்னர், கடந்த ஆண்டு (2022) ஜூலை 11- ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுக்களை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு பல கட்ட விசாரணைக்கு பிறகு ஜனவரி 4-ம் தேதிக்கு (நேற்று) தள்ளிவைக்கப்பட்டது. நேற்று இந்த வழக்கில் பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை இன்று தள்ளி வைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: ரௌடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை – ஐஜி கார்த்திகேயன்

இதன்படி, வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில் பரபரப்பான வாதங்கள் முன் வைக்கப்பட்டது. குறிப்பாக, அ.தி.மு.க.,வின் அடிப்படை விதிகளையே தற்போது மாற்றி அமைத்துள்ளனர். கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியையும் மாற்றியுள்ளனர், எனக் கூறப்பட்டது.

பொதுக்குழுவை ஆண்டுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும். தேவைப்பட்டால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட முடியும். குறுக்கு வழியில் பதவியைப் பிடிக்க எடப்பாடி பழனிச்சாமி முயற்சிக்கிறார். என ஓ.பி.எஸ் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வழக்கின் விசாரணையை நாளைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மேலும், இரு தரப்பினரும் நாளை வாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Supreme court postpones admk meeting case

Best of Express