தமிழ் நாட்டில் இருக்கும் கல்லூரிகளில் 69% இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த இடஒதுக்கீட்டினை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த அகிலா மற்றும் அன்னபூரணி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
69% இடஒதுக்கீடு : தடை செய்யக் கோரி மனு
அவர்கள் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில், மாணவிகள் இருவரும் “ தமிழகத்தில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டினால், பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் சேர, பொதுப் பிரிவு மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆகவே அந்த இட ஒதுகீட்டினை ரத்து செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்த வழக்கின் விசாரணையின் போது, தமிழக அரசு சார்பாக நீதிமன்றத்தில் “இடஒதுக்கீட்டு மசோதாவினை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, அதன் பின்னரே சட்டம் இயற்றப்பட்டது” என்று பதில் கூறியிருந்தார்கள்.
அரசு தரப்பு நியாயத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பான கூடுதல் மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.