Advertisment

ஓ.பி.எஸ் மனுவை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணையில் சொத்து குவிப்பு வழக்கு

தமிழ்நாட்டில், 2001-2006ஆம் ஆண்டில் வருவாய்த்துறை அமைச்சராக ஓ.பி.எஸ் பதவியில் இருந்தபோது ரூ.1.77 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

author-image
WebDesk
New Update
OPS In Assembly

சொத்துக் குவிப்பு வழக்கில், ஓ.பி.எஸ் மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துவிட்டது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Ops | Supreme Court Of India | முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு விட்டது.

தமிழ்நாட்டில், 2001-2006ஆம் ஆண்டில் வருவாய்த்துறை அமைச்சராக ஓ.பி.எஸ் பதவியில் இருந்தபோது ரூ.1.77 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், 2006ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மதம் விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இந்த நிலையில், தனக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்குக்கு தடை கோரி ஓ.பி.எஸ் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிரசன் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரின் வாதத்தை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதன்மூலம் ஓ.பி.எஸ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Ops Supreme Court Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment