/indian-express-tamil/media/media_files/Zm3Y3SznjBrIxbX2HrbL.jpg)
3 சிறைவாசிகள் விடுதலை கோப்புகள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் - உச்ச நீதிமன்றம் கேள்வி; பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு ஆளுநர் பதிலளிக்கவும் உத்தரவு
தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 சிறைவாசிகள் விடுதலை கோப்புகள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு ஆளுநர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கோவை சிக்கந்தர், ரியாசுதீன் உட்பட 3 சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. இது தொடர்பான கோப்பு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசால் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோப்பு மீது தமிழ்நாடு ஆளுநர் ரவி எந்த முடிவும் எடுக்கவில்லை.
ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் இன்று 3 சிறைவாசிகள் விடுதலை கோப்பு விவகாரத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெஞ்ச் முன் தமிழ்நாடு அரசு எழுப்பியது.
அப்போது, 3 சிறைவாசிகள் விடுதலை கோப்புகள் ஏன் நிலுவையில் உள்ளன? ஆளுநர் எப்போது முடிவெடுப்பார்? தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளின் நிலை என்ன? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து 3 சிறைவாசிகள் விடுதலை கோப்பு விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பிப்ரவர் 2 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் அதிரடியாக உத்தரவிட்டது.
பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் சிறையில் உள்ள கோவை சிக்கந்தர், ரியாசுதீன் உள்ளிட்டோரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அமைச்சரவையில் கடந்த 2021 ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.