நீதிமன்ற அனுமதியுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகலாம் - சுப்ரீம் கோர்ட்

நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து அனுமதி பெற்ற பிறகு செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகலாம் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து அனுமதி பெற்ற பிறகு செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகலாம் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
senthil balaji supreme court 2

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்ய காந்த், ஜெயமால்யா பாக்சி அமர்வில் திங்கள்கிழமை (06.10.2025)_ விசாரணைக்கு வந்தது.

அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி செந்தில் பாலாஜி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்ற தீர்ப்பில் உள்ள சில கருத்துகளை நீக்கி உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முறையீடு செய்து மனு தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்ய காந்த், ஜெயமால்யா பாக்சி அமர்வில் திங்கள்கிழமை (06.10.2025)_ விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “வழக்கு விசாரணையில் இருக்கும்போது குற்றம்சாட்டப்பட்டவர் அமைச்சராக நீடிக்கக் கூடாது எனக் கூறமுடியாது” என வாதம் முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அவர் அமைச்சராக இருந்தால் சாட்சியங்களை கலைக்க நேரிடும். அவர் அமைச்சராக இல்லாததை கருத்தில் கொண்டே ஜாமீன் வழங்கப்பட்டது. அமைச்சாராவதை நீதிமன்றம் தடுக்கவில்லை. ஆனால், அமைச்சராகும்போது சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்வதாக புகார் வந்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்தனர்.

Advertisment
Advertisements

இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிட்ட  மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்வதாக எந்த குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படவில்லை, இன்னும் வழக்கின் விசாரணையே தொடங்கவில்லை” என வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வேண்டுமென்றே வழக்கின் விசாரணையை தாமதப்படுத்த செந்தில் பாலாஜி தரப்பில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜி தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஏன் டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றக் கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றினால், மாநில நீதித்துறையின் மீது தவறான கருத்துக்கு வழிவகுக்கும் என்று தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிங்வி தெரிவித்தார்.

இதற்கு நீதிபதிகள் வழக்கு விசாரணையை டெல்லிக்கு மாற்றுவது தொடர்பாக கருத்து மட்டுமே தெரிவித்ததாக கூறினர். மேலும், செந்தில் பாலாஜி அமைச்சராக வேண்டுமென்றால் தனி மனுவாக தாக்கல் செய்து, நீதிமன்ற அனுமதியுடன் அமைச்சராகலாம். ஆனால், அமைச்சராகும்போது சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்வதாக புகார் வந்தால் , ஜாமீன் விதிமுறைகளை மீறினார் என்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் ரத்து செய்யப்படும். செந்தில் பாலாஜி அமைச்சராக வேண்டுமென்றால் தனி மனுவாக தாக்கல் செய்து கோர்ட்டு அனுமதியுடன் அமைச்சராகலாம் எனத் தெரிவித்தனர்.

மேலும், அனைத்து தரப்பும் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்து.

இதனால், செந்தில் பாலாஜி விரைவில் மீண்டும் தமிழக அமைச்சரகாக பொறுப்பேற்பார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

Supreme Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: