/indian-express-tamil/media/media_files/P1s29Tth0xgWS5v0nSKh.jpg)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய முக்கிய மசோதாக்களில் ஒன்று பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் மாநில அரசுக்கு அதிகாரம் அளிப்பது. .(புகைப்படம்: X/@rajbhavan_tn)
தற்போது கேரளா, தமிழ்நாடு மற்றும் பஞ்சாப், மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக அந்தந்த ஆளுநர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்க: Days after SC flagged ‘serious concern’ about Raj Bhavan inaction, TN Governor Ravi returns 10 Bills
மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்களில் கையெழுத்திடாமல் நிலுவையில் வைத்திருக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய சில நாட்களுக்குப் பிறகு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார்.
இருப்பினும், நவம்பர் 18-ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் அந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற தமிழக அரசு ஆயத்தமாக உள்ளது. திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் எம். அப்பாவு, சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெறும் என்று கூறினார்.
இந்த சிறப்பு கூட்டத்தின் நோக்கம் குறித்து கூறிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட பல மசோதாக்களை அரசுக்கு திருப்பி அனுப்பியதாக அறிந்தேன். அத்தகைய மசோதாக்களை மீண்டும் உடனடியாக ஏற்றுக்கொள்ள மாநில அரசு உத்தேசித்துள்ளது. எனவே, சட்டப்பேரவை நவம்பர் 18-ம் தேதி கூடும் என்று அப்பாவு கூறினார்.
தற்போது கேரளா, தமிழ்நாடு மற்றும் பஞ்சாப், மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக அந்தந்த ஆளுநர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன.
தமிழகத்தில், 54 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான 4 அதிகாரப்பூர்வ உத்தரவுகள் மற்றும் ஒரு கோப்பு தவிர, குறைந்தது 12 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. ஆளுநர் ஆர்.என். ரவியால் அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களின் எண்ணிக்கை தெளிவாக இல்லை. அக்டோபர் மாதம் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
தி.மு.க அரசின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “இந்தப் பிரச்னைகள் தீவிரமான கவலையை எழுப்புகின்றன. அட்டவணைப்படுத்தப்பட்ட அறிக்கையிலிருந்து, விதி 200-ன் கீழ் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட 12 மசோதாக்கள் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. அனுமதி வழங்குதல், முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட கைதிகள், நியமனங்கள் போன்ற பிற விஷயங்கள் நிலுவையில் உள்ளன.” என்று தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.