/tamil-ie/media/media_files/uploads/2019/01/a302.jpg)
Minister Balakrishna reddy 3 years imprisonment chennai special court - அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை!
முன்னாள் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் 3 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
1988-ல் கிருஷ்ணகிரியில் நடந்தப் போராட்டத்தின் போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினா் மற்றும் பேருந்துகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய இந்த வழக்கில் முன்னாள் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் பாலகிருஷ்ணா ரெட்டி.
”தனக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்று” அதில் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்றம் சிறைத் தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்துள்ளது. அதே நேரத்தில், பாலகிருஷ்ணா ரெட்டி மீதான வழக்கு விசாரணைக்கு எந்த தடையும் இல்லை, எனவும் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.