கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், கேரளா 'தண்டர்போல்ட்ஸ்' நக்சல் தடுப்புப் பிரிவு போலிஸ், நடத்திய தாக்குதலில், நான்கு மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்த நான்கு பேரும் கர்நாடக, தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலில் சிபிஐ (மாவோயிஸ்ட்) தண்டகாரண்யா சிறப்பு மண்டலக் குழுவின் முக்கியத் தலைவர் தீபக்,பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதி உட்பட சிலர் குண்டு காயங்களுடன் தப்பித்தனர்.
மாவோயிஸ்ட் ஸ்ரீமதி நேற்று கைது: இந்நிலையில், தமிழ்நாடு-கேரள எல்லையில் அமைந்திருக்கும் ஆனைகட்டி வனத்துறை சோதனைச்சாவடியில் மாவோயிஸ்ட் என சந்தேகிக்கப்படும் ஸ்ரீமதி மற்றும் மற்றொரு பெண்ணை தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று, அதிகாலை 5.30 மணிக்கு சோதனைச்சாவடியில் ரகசியமாக மறைந்திருந்த கியூ பிரிவினர்,கோயம்புத்தூர் செல்லும் அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையில் ஸ்ரீமதியும் அவருடன் இருந்த பெண்ணையும் காவல்துறை செய்தது.
ஈரோடு மாவட்டம் ஆணைக்கல்பாளையத்திலுள்ள க்யூ பிரிவு போலீசார் அலுவலகத்தில் விசாரிக்கப்படும் ஸ்ரீமதியை, கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீங்கேரி தாலுகாவை சேர்ந்த ஸ்ரீமதி மீது ஒன்பது வழக்குகள் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு,கேரளாவில் ஸ்ரீமதி மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாய குடும்பத்தை சேர்ந்த ஸ்ரீமதி ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர். 2008 ஆம் ஆண்டில் தனது குடும்பத்தை விட்டு வெளியேறிய, தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தார் என்று கூறப்படுகிறது.
கேரளா நக்சலிசம் : கேரளாவில் மாவோயிச நடவடிக்கைகளின் தன்மை மற்ற மாநிலங்களில் இருக்கும் மாவோயிசத்தில் இருந்து வேறுபடுகிறது. உதாரணமாக, கேரளா மாவோயிசம் ஒருபோதும் பொதுமக்களை குறிவைத்து மனித உயிரிழப்புகளை ஏற்படுத்துவது இல்லை.
கேரளா, தமிழ்நாடு கர்நாடகாவின் சந்திக்கும் தடையற்ற வனப்பகுதியில் தான் மாவோயிச நடவடிக்கைகளுக்காக பயன் படுத்தப்பட்டு வருகிறது. பாலக்காடு, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களில் இருக்கும் காடுகள் இந்த முக்கோணத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது.
மேலும், விவரங்களுக்கு : Explained: கேரளா மாவோயிஸ்டுகள் யார் ? மற்ற 'தோழர்களிடமிருந்து' எப்படி வேறுபடுகிறார்கள் ?