கோவை அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவரை பாம்பு கடித்ததா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
கோவையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஜெயக்குமார் என்பவரும் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் பயிற்சி மருத்துவர்கள் தங்கும் அறையில் ஜெயக்குமார் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, அவரை ஏதோ ஒரு பூச்சி கடித்ததாக தெரிகிறது. இதையடுத்து, அதே மருத்துவமனையில் ஜெயக்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா விளக்கம் அளித்துள்ளார். அதில், ஜெயக்குமாரை பாம்பு கடித்ததா அல்லது பூச்சி கடித்ததா என உறுதியாக தெரியவில்லை எனவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜெயக்குமார் நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“