Advertisment

பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சை கருத்து: எஸ்.வி. சேகருக்கு விதித்த சிறைதண்டனை நிறுத்திவைத்து ஐகோர்ட் உத்தரவு

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்துகளைப் பகிர்ந்த வழக்கில், எஸ்.வி.சேகருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த ஒரு மாத சிறை தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
sve shekher hc

எஸ்.வி.சேகருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த ஒரு மாத சிறை தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்துகளைப் பகிர்ந்த வழக்கில், எஸ்.வி.சேகருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த ஒரு மாத சிறை தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்துகளைப் பகிர்ந்த வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.15000 அபராதத்தை செனை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

நடிகரும் பா.ஜ.க நிர்வாகியுமான எஸ்.வி.சேகர், கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தீன் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு போலீசார் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி கடந்த 2023-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். மேலும், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்துக்களை பகிர்ந்ததற்காக நிபர்த்தனையற்ற மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். ஆனால், எஸ்.வி.சேகர் வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பளித்தார். அதில், எஸ்.வி.சேகர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது. அவர் மீதான வழக்கை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் 6 மாதங்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கில் 2019-ம் ஆண்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துகளைப் பகிர்ந்தது தொடர்பாக, தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணை பல கட்டங்களாக நடைபெற்ற நிலையில், பிப்ரவரி 19, 2024-ல் தீர்ப்பளித்த நீதிபதி ஜி. ஜெயவேல், இந்திய தண்டனை சட்டம் 504 அமைதியை சீர் குலைத்தல், 509 தெரிந்த குற்றம் என கருதி மிரட்டல் விடுத்தல், பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடிகர் எஸ்.வி. சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாக தீர்ப்பளித்தார்.

இதையடுத்து அபராத தொகையை செலுத்திய பிறகு தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதாக எஸ்.வி.சேகர் தரப்பில் மனு தாக்கல் செய்ததை ஏற்று தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எஸ்.வி.சேகர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (15.03.2024) சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் நடைபெற்றது. அப்போது எஸ்.வி.சேகரின் ஒரு மாத சிறை தண்டனையை நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனுவிற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

SV Shekhar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment