சிகிச்சையின்போது நோயாளிகள் மரணமடைந்தால் மருத்துவரை கைது செய்யும் நடைமுறையில் மாற்றம்: சைலேந்திரபாபு உத்தரவு

நோயாளி மரணம் தொடர்பாக மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க புதிய நடைமுறைகளை பின்பற்றும்படி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

நோயாளி மரணம் தொடர்பாக மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க புதிய நடைமுறைகளை பின்பற்றும்படி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
சைலேந்திரபாபு

சைலேந்திரபாபு

நோயாளி மரணம் தொடர்பாக மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க புதிய  நடைமுறைகளை பின்பற்றும்படி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

மருத்துவ சிகிச்சையின்போது நோயாளிகளுக்கு மரணம் ஏற்பட்டால் அது மருத்துவரின் கவனக்குறைவு அல்லது அலட்சியம் காரணமாக ஏற்பட்டது எனவே இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 (ஏ)- இன் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை  எடுக்க வேண்டும்  என்ற புகாரை  குடும்ப உறுப்பினர்கள்  காவல் நிலையத்தில் அளிக்கும்போது காவல்துறை, உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இந்நிலையில் புதிய நடைமுறைகள் குறித்து  சைலேந்திர பாபு பிறபித்த உத்தரவு பின்வருமாறு:

முழுவிசாரணை நடத்தி அனைத்து விதமான வாய்மொழி மற்றும் ஆவண ஆதாரங்களை திரட்ட வேண்டும். மூத்த அரசு மருத்துவர்களிடம், குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரிடமிருந்து வல்லுநர் கருத்து பெற வேண்டும். இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 ( ஏ) ஒன் கீழ் குற்ற செயல் உறுதி செய்யப்பட்டால்,  மேல் நடவடிக்கை முன் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் சட்ட ஆலோசனை பெற வேண்டும். சிகிச்சையின்போது அலட்சியமாக நடந்து கொண்டதாக ஒரு மருத்துவரின் மீது குற்றம்சாட்டப்பட்டால் மற்ற வழக்குகளைப் போல் கைது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

Advertisment
Advertisements

வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக வழக்கில் தொடர்புடைய அனைத்து  சாட்சியங்களையும் சமந்தப்பட்ட  மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்  நேரடியாக ஆய்வு  செய்ய வேண்டும். வழக்கின் விவரங்கள், ஆதாரங்கள், சாட்சியங்கள் மற்றும் குற்றம் நடைபெற்ற சூழ்நிலை ஆகியவை தொடர்பான விரைவு அறிக்கையை சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கு  வழக்கு பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அனுப்பபட  வேண்டும்” என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: