/tamil-ie/media/media_files/uploads/2018/07/s792.jpg)
தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து உடனடியாக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். முன்னாள் எம்.பி.யும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் முன்னாள் செயலாளருமான இவருக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கடந்த ஆண்டும் தா.பாண்டியனுக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
முன்னதாக, நேற்று கோபாலபுரம் சென்று தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த தா.பாண்டியன், "கருணாநிதி உயிருக்காக மன்றாடவில்லை, அவரிடம் இயற்கை போராடுகிறது" என்று நம்பிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.