/indian-express-tamil/media/media_files/2025/08/17/coimbatore-dek-2025-08-17-19-16-30.jpg)
டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்: மழலைகளின் ஆக்ரோஷம்!
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு டேக்வாண்டோ அசோசியேஷன் மற்றும் கோவை மாவட்ட டேக்வாண்டோ அமைப்பினர் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில், மழலையர் உட்பட 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆக்ரோஷமாகத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
கோவை காந்திபார்க் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அரங்கில் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 7 வயதுக்குட்பட்டோர், சப்-ஜூனியர், கேடட், ஜூனியர் மற்றும் சீனியர் எனப் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. பூம்சே மற்றும் கிரோகி ஆகிய 2 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற மாணவர்கள் தங்களின் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குப் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. போட்டியை ஏற்பாடு செய்த டேக்வாண்டோ சங்க நிர்வாகிகள் பேசுகையில், டேக்வாண்டோ விளையாட்டில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தமிழக மாணவர்கள் பல சாதனைகளைப் படைத்து வருவதாகக் குறிப்பிட்டனர்.
அவர்கள் தமிழக அரசுக்கு ஒரு முக்கியமான கோரிக்கையை விடுத்தனர். டேக்வாண்டோ விளையாட்டுக்குத் தேவையான சென்சார் உபகரணங்களை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அவ்வாறு செய்தால், மாணவர்கள் சிறந்த முறையில் பயிற்சி பெற்று, வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.