scorecardresearch

தாம்பரத்தில் பாதாள சாக்கடை பணிக்கான காலக்கெடு: மே மாதம் ஒத்திவைப்பு

2019க்குள் முடிக்கப்பட வேண்டிய திட்டப்பணியில், தற்போது 27% முடிவடைந்துள்ளது.

தாம்பரத்தில் பாதாள சாக்கடை பணிக்கான காலக்கெடு: மே மாதம் ஒத்திவைப்பு

தாம்பரம் மாநகராட்சியின் 165 கோடி மதிப்பிலான பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முடிப்பதற்கான புதிய காலக்கெடு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2019க்குள் முடிக்கப்பட வேண்டிய திட்டப்பணியில், தற்போது 27% முடிவடைந்துள்ளது.

இந்த பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், மேற்கு தாம்பரத்தில் 2,000 பேருக்கும், கிழக்கு தாம்பரத்தில் 6,000 பேருக்கும் மட்டுமே கடந்த பல ஆண்டுகளாக இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் கோவிட்-19 பாதிப்பினால், காவல்துறையினரின் அனுமதிகளில் தாமதம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்ட கமிஷனர், அனைத்து கழிவுநீர் டேங்கர் லாரிகளும் குறைந்த கட்டணத்தில் இந்த வசதியை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படும் என்றார்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் காலி மனைகளிலும், மழைநீர் வடிகால்களிலும் விடப்படுவதால், வீரராகவன் ஏரி, புத்தேரி ஏரி உள்ளிட்ட பல நீர்நிலைகள் மாசடைந்து வருகின்றன.

ஒவ்வொரு வாரமும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் (டிஎன்பிசிபி) புகார் அளிக்கப்படுகிறது. நீர்நிலைகளில் கழிவுநீரை கொட்டுவது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தெற்கு பெஞ்சில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பொதுமக்களின் பணத்தை வீணடிப்பதையும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதையும் மாநகராட்சி தடுத்து, தாம்பரம் மாநகராட்சி முழுவதும் பாதாள சாக்கடையுடன் இணைக்க வேண்டும் என்று தாம்பரத்தில் வசிக்கும் மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tambaram sewage work deadline pushed to may

Best of Express